டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய் குடும்பத்தார் திருமணத்துக்கு வற்புறுத்தியதால்தான் உடனே திருமணம் செய்து கொள்ள சம்மதித்தேன் என்று அமலாபால் கூறினார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: 'தெய்வ திருமகள்' படத்தில் நடித்தபோதே இருவரும் காதலிக்க ஆரம்பித்து விட்டோம். எங்கள் காதலை, விக்ரம்தான் முதன் முறையாக கண்டுபிடித்தார். நீங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கூறினார். தலைவா படத்தின் போது தினமும் சிட்னி நகரில் தனியாக வாக்கிங் போவோம். அப்போது நிறைய மனம் விட்டு பேசியிருக்கிறோம். இதை பார்த்த கலா மாஸ்டருக்கும் எங்கள் காதல் தெரிந்தது. தலைவாவில் கயிறில் தொங்கியபடி நடனம் ஆடியபோது கீழே விழுந்து காயம் பட்டது. உடனே விஜய் அழுதுவிட்டார். இதை பார்த்து யூனிட்டில் உள்ள அனைவருக்கும் எங்கள் காதல் தெரிந்தது. அங்கிருந்து கசிய ஆரம்பித்து விட்டது.
எங்கள் காதல் திருமணத்தில்தான் முடியும் என்று எனக்கு முன்பே தெரியும். ஆனால் நான் இன்னும் மூன்று வருடங்கள் நடிக்க விரும்பினேன். விஜய்யும் நீ நல்ல நடிகை இன்னும் மூன்று வருடங்கள் நடித்தால் நல்ல நிலையை அடைந்து விடுவாய் என்றுதான் கூறினார். ஆனால் அவரது வீட்டில் திருமணத்துக்கு வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். அவர் இனிமேலும் எனக்காக காத்திருக்க முடியாத என்ற சூழ்நிலையில்தான் திருமணம் செய்ய முடிவு செய்தோம். எப்போதுமே எனக்கு சினிமாவை விட வாழ்க்கைதான் முக்கியம்.
இவ்வாறு அமலாபால் கூறியுள்ளார்.