ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நல்ல சினிமாவை ஆதரிப்பவர், ஆராதிப்பவர் பிரகாஷ்ராஜ். தன்னுடைய டூயட் மூவிஸ் பேனரில் அவர் தயாரித்த அத்தனை படங்களுமே ஆரோக்கியமான திரைப்படங்களே. நல்ல சினிமாவை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே நடித்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு படங்களைத் தயாரிப்பார் பிரகாஷ்ராஜ். அதுமட்டுமல்ல, பிரகாஷ்ராஜ் சிறந்த படம் என்று நம்பிய அரவான் படம் தயாரிப்புநிலையில் இருந்தபோது மிகப்பெரிய பணச்சிக்கலை சந்தித்தது. அதனால் அரவான் படம் வெளிவருவதில் தடங்கலும் ஏற்பட்டது. இதைக் கேள்விப்பட்ட பிரகாஷ்ராஜ், ஹைதராபாத்திலிருந்து கிளம்பி வந்து அரவான் படத்தின் தயாரிப்பாளர் சிவாவிடம் ஒரு கோடி ரூபாயைக் கொடுத்துவிட்டு, படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டுப்போனார்.
அப்படிப்பட்ட பிரகாஷ்ராஜுக்கு பார்த்திபன் மீதும், அவரது படங்கள் மீதும் மிகப்பெரிய மரியாதை உண்டு. பார்த்திபனுக்கு சரியான படங்கள் அமையவில்லை என்பதைக் கேள்விப்பட்டு, புதுமுகங்களை வைத்து எடுப்பதுபோல் ஒரு சப்ஜெக்ட்டோடு வாருங்கள். உங்களுக்கு ஒரு கோடி சம்பளம் தந்து அந்தப் படத்தை நானே தயாரிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார் பிரகாஷ்ராஜ். இந்தத் தகவலை சொல்லி புளகாங்கிதப்படுகிறார் பார்த்திபன்.