ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சில தினங்களுக்கு முன் நடிகர் நாசரின் மகன் ஃபைசல் விபத்தில் சிக்கியபோது, கமல்ஹாசன் உடன் உத்தமவில்லன் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருந்தார் நாசர். காலை ஏழு மணிக்கு அவர் மேக்கப்போட்டுக் கொண்டிருந்தபோது தொலைபேசியில் தகவல் வர, பதறியடித்துக் கொண்டு விரைந்தார். விஷயத்தைக் கேள்விப்பட்ட கமல் உடனடியாய் மாமல்லபுரம் காவல்துறை உயர் அதிகாரியை தானே தொடர்பு கொண்டு நாசருக்கு தேவையான உதவிகளை செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
அது மட்டுமல்ல, படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நாசரின் மகன் ஃபைசல் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு டாக்டர்களிடம் ஆலோசனை செய்து, நாசருக்கு ஆறுதல் சொல்லி தேற்றியதோடு, அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஃபைசலின் உடல்நிலை பற்றி விசாரித்தவண்ணம் இருந்தார். இதை எல்லாம் தாண்டி நாசர் செய்த விஷயம்தான் திரையுலகில் அவரை அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறது.
உத்தமவில்லன் படத்தில் நாசர் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவதற்காக செட் போடப்பட்டிருந்தது. மகனுக்கு ஏற்பட்ட விபத்தினால் துயரத்தில் இருக்கும் நாசரால் இப்போதைக்கு நடிக்க முடியாது என்பதால் செட்டை பிரிக்கச் சொல்லிவிட்டாராம் கமல். அதனால் தயாரிப்பாளருக்கு பல லட்சம் நஷ்டமாகும். இதைக் கேள்விப்பட்ட நாசர், செட்டை பிரிக்க வேண்டாம்.. ஹாஸ்பிடலிலேயே இருப்பது எனக்கும் கஷ்டமாக இருக்கிறது. நான் படப்பிடிப்புக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, உத்தமவில்லன் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.