அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான் படம் கடந்த வெள்ளிக்கிழமை (மே 23) ரிலீசானது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்திற்கு திருட்டி விசிடி வெளியாகும் வாய்ப்பு அதிகம் என்பதால் ரஜினி ரசிகர்கள் அதனை தடுக்க மாட்டம் வாரியாக கண்காணிப்பு படையை உருவாக்கி உள்ளனர்.
சேலம் கண்காணிப்பு படையினர் நேற்று (மே 24) பொறிவைத்து திருட்சி விசிடியை பிடித்தனர். சேலம் பகுதியில் கோச்சடையான் திருட்டு விசிடி விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் பழனிவேல் தலைமையில் ரசிகர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கினர். சேலம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு சிடி கடையில் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுவதை கண்டு அதை கண்காணித்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பெரிய பார்சல் ஒன்றை கொண்டு வந்த ஒருவர் கடைக்குள் நுழைந்தார். அவரை பின் தொடர்ந்து சென்ற ரசிகர்கள் அந்த பார்சலை கைப்பற்றி பிரித்து பார்த்தபோது அதில் சுமார் 500 கோச்சடையான் திருட்டு விசிடிக்கள் இருந்தன.
உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் சிடிக்களை கைப்பற்றி கடை உரிமையாளரையும், ஊழியர்களையும் கைது செய்தனர். தமிழ்நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள்.