பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஒரு படம் வெற்றி பெற்றால் அந்த இயக்குனரைத் தேடி ஹீரோக்கள் ஓடுவதும், தோல்வியைடந்தால் அந்த படத்தின் இயக்குனரை விரட்டியடிப்பதும் தமிழ் சினிமாவில் சகஜமான ஒன்றுதான்.
சசிகுமார், லட்சுமி மேனன் நடித்த 'சுந்தரபாண்டியன்' வெற்றிப் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரனை தானாகவே தேடிப் போய் தனது அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்தார் உதயநிதி ஸ்டாலின். அவர் நாயகனாக நடிக்க நயன்தாரா நாயகியாக நடிக்க எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் வெளிவந்த 'இது கதிர்வேலன் காதல்' தோல்விப் படமாகவே அமைந்தது.
அப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாகவே பிரபாகரன் தனது அடுத்த படத்தையும் இயக்குவார் என உதயநிதி அறிவித்தார். ஆனால், நடந்ததோ வேறு….கதையெல்லாம் தயார் செய்து உதயநிதியிடம் கொடுத்தாராம் பிரபாகரன். அவற்றில் சில திருத்தங்களை சொல்லியிருக்கிறார் உதயநிதி. அது பிடிக்காத பிரபாகரன், “நீங்கள் திருத்தங்களை சொன்னதுக்கு சரின்னு சம்மதிச்சு எடுத்த கதிர்வேலன் காதல் தோல்வியடைஞ்சிடுச்சி. அதனால நான் எந்த திருத்தத்தையும் செய்ய மாட்டேன்,” என பேசியிருக்கிறார்.
அதோடு அவர்களின் அடுத்த பட விவகாரம் முடிவுக்கு வந்ததாம். பல முயற்சிகளுக்குப் பின் 'மான் கராத்தே' படத்தைத் தயாரித்த மதனிடம் போய் அந்த கதையை சொல்லியிருக்கிறார் பிரபாகரன். எந்த திருத்தமும் செய்ய வேண்டாம். நீங்கள் சொன்ன கதையை அப்படியே படமாக்கிக் கொடுங்கள் போதும் என்றாராம் மதன்.
எந்த உள்குத்தும் இல்லாமல், சந்தோஷமாக டிஸ்கஷனில் உட்கார்ந்துவிட்டார் எஸ்.ஆர்.பிரபாகரன்.