'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
2013ம் ஆண்டில் வெளிவந்த படங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற படங்கள் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா, சூது கவ்வும், எதிர் நீச்சல், குட்டிப்புலி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மூடர் கூடம் ஆகிய படங்களைச் சொல்லலாம். இந்த படங்களை முறையே மணிகண்டன், நலன் குமாரசாமி, துரை செந்தில் குமார், முத்தையா, பொன்ராம், நவீன் ஆகியோர் இயக்கியிருந்தனர்.
மேற் சொன்ன படங்கள் எல்லாம் வெளிவந்த ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும், அந்த படங்களை இயக்கிய இயக்குனர்களின் அடுத்த படங்களைப் பற்றிய அறிவிப்பு இன்னும் வரவில்லை. இதில் துரை செந்தில் குமார் மட்டும் விதிவிலக்கு. அவர் மட்டும் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து 'டாணா' படத்தை ஆரம்பித்துள்ளார். அந்த வாய்ப்பையும் தனுஷ்தான் மீண்டும் வழங்கியுள்ளார்.
அவர்களோடு 2012ம் ஆண்டு மிகப் பெரிய வெற்றி பெற்ற படமாக பேசப்பட்ட 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் கூட இன்னும் அடுத்த படத்தைப் பற்றி அறிவிக்கவே இல்லை.
வசூல் ரீதியாகவும், நல்ல படங்களைக் கொடுத்தாலும் அவர்களுக்கு ஏன் இரண்டாவது படத்தை இயக்க இத்தனை இடைவெளி என்பது தெரியவில்லை. இத்தனைக்கும் அனைத்துப் படங்களிலும் ஹீரோவாக நடித்தவர்கள் இப்போதும் முன்னணி ஹீரோக்களாகவும், வசூலைக் குவிக்கும் ஹீரோக்களாகவே இருக்கிறார்கள். ஒருவேளை தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லையா, அல்லது கதையே கிடைக்கவில்லையா ?