தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஜினியின் கோச்சடையான் வெளியான அதே நாளில் ஆந்திராவில் மனம் படமும் வெளியாகியுள்ளது. மறைந்த நடிகர் நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜூனா, அவரது மகன் நாக சைதன்யா என ஒரே குடும்பத்தைச்சேர்ந்த தாத்தா, மகன், பேரன் என மூன்று பேரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உலக அளவில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூன்று பேர் நடித்து வெளியாகியுள்ள முதல் படம் இதுதான் என்கிறார்கள்.
அதோடு, இப்படத்தில் நடித்து முடித்தபோது புற்றுநோய் பாதிப்பினால் படுத்த படுக்கையாக இருந்தார் நாகேஸ்வரராவ். இருப்பினும் தன்னை டப்பிங் தியேட்டருக்கு கொண்டு செல்ல வைத்து, தனது சொந்த குரலிலேயே தனக்கு டப்பிங் பேசினார் நாகேஸ்வரராவ். அதையடுத்து அவர் இறந்து விட்டார். அந்த அளவுக்கு தனது வாழ்க்கையின் கடைசி நிமிடங்கள் வரை சினிமாவுக்காகவே தன்னை அர்ப்பணித்திருக்கிறார் நாகேஸ்வரராவ்.
அதையடுத்து, மனம் படத்தின் அனைத்துக்கட்ட வேலைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் படம் வெளியிடப்பட்டது. அப்போது ஆந்திராவிலுள்ள ரசிகர்களைப்போலவே, நடிகர்-நடிகைகளும் அந்த படத்தை ஆவலுடன் சென்று பார்த்தவர்கள், இணையதளங்களில் அப்படத்தின் சிறப்புகளை பக்கம் பக்கமாக புகழ்ந்து தள்ளி வருகின்றனர். திரையிட்ட இடமெல்லாம் படம் சக்கை போடு போட்டு வெற்றி வாகை சூடிக்கொண்டிருக்கிறதாம்.