தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜெயம்ரவியுடன் த்ரிஷா நடித்துள்ள பூலோகம் படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இந்த நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் சிம்புவுடன் அவர் நடிக்கயிருந்த படமும் டிராப் ஆகி விட்டது. அதோடு கெளதம்மேனன் இயக்கத்தில அஜீத் நடிக்கும் படத்திலும் திரிஷா நடிக்கிற மாதிரி சொல்கிறார்கள். ஆனால் அதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்தநிலையில், இனி விஜய் அஜீத், சூர்யா, விக்ரம் போன்ற மேல்தட்டு ஹீரோக்கள் மீண்டும் தன்னுடன் இணைவது அத்தனை சுலபத்தில் நடக்கிற விசயமல்ல என்பதை புரிந்து கொண்ட த்ரிஷா, இப்போது வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் தனது அடுத்த ரவுண்டை அமோகமாக ஆரம்பிக்கவும் ரூட் போட்டு வருகிறார்.
குறிப்பாக, அவர்களின் கவனத்தை தன் பக்கம் இழுக்கும் முயற்சியாக, அவர்களது நடிப்பு குறித்து பாசிட்டீவான விமர்சனங்களை கூறிவரும் த்ரிஷா, விஜயசேதுபதியை மட்டும் கொஞ்சம் ஓவராகவே விமர்சனம் செய்து வந்தார். அவரிடமுள்ள மைனஸ்களை தள்ளி வைத்து விட்டு, ப்ளஸ்களை மட்டுமே அவர் சொன்னதால், விஜயசேதுபதியும் த்ரிஷாவின் புகழ்ச்சிக்கு அடிமையாகி கிடந்தார்.
விளைவு, சூதுகவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் விஜயசேதுபதி, அந்த படத்தின் கதையை கேட்டவர், இதில் த்ரிஷா நடித்தால் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்றொரு கருத்தை முன் வைத்துள்ளாராம். ஆனால் நலன் வேறொரு நடிகையை மனதில் வைத்திருந்தாராம். இருந்தாலும், விஜயசேதுபதி முன்கூட்டிய தனது மனதில் உள்ளதை கொட்டியதால், த்ரிஷாவின் பெயர் இப்போது பரிசீலணையில் உள்ளதாம்.