ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினியின் தீவிர ரசிகரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் நேற்று கோச்சடையான் படத்தை பார்த்தார் பின்னர் அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோச்சடையான் படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடித்துள்ளார். அவர் பொம்மையாக நடிப்பது பற்றி பலர் பலவிதமான விமர்சனங்களை முன் வைத்தனர். ரஜினி பொம்மையாக நடிப்பது ரசிகர்களை திருப்தி படுத்துமா? என்றார்கள். படம் பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி ரசிக்கிறார்கள் பொம்மையாக வந்தாலும், உண்மையாக வந்தாலும் சூப்பர்ஸ்டார் சூப்பர்ஸ்டார்தான் என்பதை நிரூபித்திருக்கிறார். இந்த படம் சூப்பர் ஸ்டாரின் கலையுலக பயணத்தில், காலம் கடந்து நிலைத்து நிற்கும் படங்களில் ஒன்றாக இருக்கும்.
யாரிடமும் உதவியாளராக இல்லாமல் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் ஹாலிவுட் தரத்துடன் ஒரு தமிழ்ப் படத்தை இயக்கி இருப்பது பாராட்டுக் குரியது. இந்த படம் வழக்கம் போல் ரசிகர்களை மட்டுமல்லாமல் குடும்பத்தினரையும் திருப்பதி படுத்தும் புது முயற்சி இது, இந்த முயற்சி வரும் காலத்தில் இது போன்ற படங்கள் தமிழில் தயாரிக்க முன்னுதாரணமாக இருக்கும்.
பொம்மையாக வந்தாலும் உண்மையாக வந்தாலும் குரல் பதிவாக வந்தாலும் சூப்பர்ஸ்டார் சூப்பர்ஸ்டார்தான் என்று நிரூபித்திருக்கிறார்.
இவ்வாறு லாரன்ஸ் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.