ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கும்கியில் லட்சுமிமேனன் அறிமுகமானபோது அவரிடம் காதல், திருமணம் பற்றி கேட்டபோது " எத்தனை மொழி சினிமாவில் நடித்தாலும், நான் காதலித்தாலும் ஒரு மலையாளியைத்தான் காதலிப்பேன். கல்யாணம் செய்து கொண்டாலும் ஒரு மலையாளியைத்தான் செய்து கொள்வேன்" என்று பதில் அளித்தார். அவர் இந்த பதிலை சொல்லும்போது பத்தாவதுதான் படித்துக் கொண்டிருந்தார்.
லட்சுமிமேனன் பாணியிலேயே துளசியும் பதிலளித்திருக்கிறார். அவரும் பத்தாவது இப்போதுதான் முடித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: "நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை அந்த வயது எனக்கு வரவில்லை. யாராவது காதலித்து விடுவார்களோ என்று தெரிந்தால் உடனே ராக்கி கட்டி அண்ணா என்று சொல்லிவிடுவேன். திருமண வயது வந்ததும், அப்பா அம்மா பார்க்கும் ஒரு நாயர் பையனை திருமணம் செய்து கொள்வேன்.
இப்போதைய கவனம் சினிமா மீதும், படிப்பு மீதும் மட்டும்தான். 11ம் வகுப்பு எக்ஸாசம் எழுதியிருக்கேன். இன்னும் ஒருவருடம் படிப்பு ரொம்ப முக்கியம். கடல் சரியாக போகாததில் வருத்தம் இல்லை. பெரிய இயக்குனர் மூலம் அறிமுகமானதே பெருமைதானே. யான் படத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் எனக்கு தனி இடம் கிடைக்கும்னு நம்புறேன்" என்கிறார் துளசி.