தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இசை அமைப்பாளர் (சங்கர்) கணேஷின் மகன் ஸ்ரீ. சின்னத்திரையின் முன்னணி நாயகர். சிவசக்தி தொடரில் நடித்தபோது அதே தொடரில் நடித்த சமிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது இருவரும் இணைந்து பிள்ளை நிலா தொடரில் நடித்து வருகிறார்கள். தற்போது ஸ்ரீ பெரிய திரையிலும் கால்பதித்திருக்கிறார். கானகம், வேம்புலி படங்களின் ஹீரோ ஸ்ரீதான்.
சினிமா பிரவேசம் பற்றி ஸ்ரீ கூறியதாவது: நான் சின்னத்திரையில் நடித்தாலும் அப்பா ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசை அமைத்தவர் எனக்கு சினிமா ஆசை இருக்காதா என்ன? கேமரா முன் நிற்கும் ஒவ்வொருவருக்கு சினிமாதான் இலக்காக இருக்கும். எனது நீண்டநாள் கனவு இப்போது நிறைவேறியிருக்கிறது. நடிப்பை பொருத்தவரையில் எனக்கு சின்னத்திரை பெரிய திரை இரண்டுமே ஒன்றுதான். தயாரிப்பு, உழைப்பு இதுதான் வித்தியாசம்.
பெரிய ஹீரோவாக வேண்டும் என்கிற ஆசையெல்லாம் கிடையாது. சின்னத்திரையில் வாங்கியது போன்று நல்ல நடிகர் என்று பெயர் வாங்கினால் போதும். சிறுவயதிலிருந்தே இசை சூழ்நிலையில் வளர்ந்தேன். ஆனால் எனக்கு நடிப்பில்தான் ஆர்வம் இருந்தது. அப்பாவின் சிபாரிசு இல்லாமல் நானே வாய்ப்புகளை தேடிக் கொண்டேன். இந்த உயரம் என்னால் கிடைத்தது. என்கிறார் ஸ்ரீ.