டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இயக்குனர் ஹரி, தற்போது விஷால், ஸ்ருதி ஹாசன் நடிக்கும் பூஜை படத்தின் படப்பிடிப்புகளை கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதியில் நடத்தி வருகிறார். சினிமா இயக்குனராகி விட்டாலும் இன்னும் அசல் கிராமத்தான் மனநிலையோடு இருப்பவர் ஹரி. பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப், இணையதளம் எதிலும் அவருக்கு ஆர்வம் கிடையாது. அவரது செல்போனைக்கூட உதவியாளர்கள்தான் கையாள்வார்கள். இந்த நிலையில் ஹரியின் பெயரில் பேஸ்புக் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டு அவரை பற்றி செய்திகள் அதில் அப்டேட் செய்யப்பட்டு வந்தது. இது தொடர்பாக நேற்று (மே 23) ஹரி கோவை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் பல ஆண்டுகளாக சினிமா இயக்குனராக பணியாற்றி வருகிறேன். இதுவரை எனது பெயரில் நான் பேஸ்புக் கணக்கு எதுவும் தொடங்கவில்லை. திரைப்படத் துறையில் நான் பிரபலமாக இருப்பதால் இயக்குனர் ஹரி என்ற பெயரில் பேஸ்புக் கணக்கு தொடங்கி அதில் என்னை பற்றி தவறான தகவல்களை யாரோ தந்து கொண்டிருக்கிறார்கள். எனவே எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள பேஸ்புக் கணக்கை தடைசெய்து அது சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவை சைபர் கிரைமுக்கு அனுப்பிய கமிஷனர் இது தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.