பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
முன்பெல்லாம் சென்னை சிட்டிக்குள்தான் சினிமா நடிகர்-நடிகைகள்-டைரக்டர்களெல்லாம் வீடு வாங்கி செட்டிலாவார்கள். ஆனால் இப்போது வீடு வாங்க நினைக்கும் அனைவருமே சென்னையிலுள்ள ஈசிஆர் சாலை பகுதிக்குத்தான் செல்கிறார்கள். அதுவும் தங்கள் வீட்டில் நின்று பார்த்தால் கடல் தெரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
அந்த வகையில், இளையராஜா, கமல், வைரமுத்து, விஜய், அஜீத், சூர்யா என பல முன்னணியினர் இப்போது ஈசிஆர் சாலையில்தான் பிரமாண்டமான மாளிகை கட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், ரஜினி மட்டும்தான் இன்னும் போயஸ் கார்டன் வீட்டிலேயே இருந்து வருகிறார்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் புதிதாக வளர்ந்து கொண்டிருக்கும் நடிகர்களுக்கும், சில படங்களில் நடித்து சம்பாதித்ததுமே ஈசிஆரில் வீடு கட்டி விடவேண்டும் என்பதுதான முதல் கனவாக உள்ளது. அந்த வகையில், தற்போது சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்த பரத்தும் அந்த ஏரியாவில் வீடு வாங்க இடம் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து விஜயசேதுபதியும் ஒரு வெள்ளை மாளிகை கட்ட தீவிரமாக இடம் பார்த்து வருகிறாராம்.
இப்படி முன்னணியினரும், வளர்ந்து வருபவர்களும் ஈசிஆருக்கு ஓடிக்கொண்டிருபபதால், இப்போது ஈசிஆர் சாலையில் வீடு கட்டினால்தான நடிகர்களுக்கு மரியாதை என்கிற நிலை கோடம்பாக்கத்தில் ஏற்பட்டிருப்பதால், அடுத்தபடியாக தனுஷ், சிவகார்த்திகேயன்,அனிருத் போன்ற மூவர் கூட்டணியும் விரைவில் ஈசிஆருக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்களாம்.