'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிம்பு நயன்தாராவை வைத்து இது நம்ம ஆளு படத்தை ஆரம்பித்த இயக்குநர் பாண்டிராஜ் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அந்தப் படத்துக்கு பாண்டிராஜ் இயக்குநர் மட்டுமல்ல, தயாரிப்பாளரும் கூட. சிம்புவுக்கு அட்வான்ஸ் கொடுத்தது முதல் சுமார் ஒன்றரை கோடி ரூபாயை வட்டிக்கு வாங்கி அந்தப் படத்தின் தயாரிப்புக்கு செலவு செய்திருக்கிறார் பாண்டிராஜ். அதன் பிறகு தேவைப்பட்ட பணத்தைப் புரட்ட அவர் சிரமப்பட்டதைக் கேள்விப்பட்ட சிம்பு, அந்தப் படத்தின் கதையின் மீதுள்ள நம்பிக்கையினால் தானும் பார்ட்னராக சேர்ந்து கொண்டார்.
நயன்தாரா மீண்டும் தன்னுடன் ஜோடி சேர்ந்த மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போன சிம்பு நல்லபிள்ளையாய் இது நம்ம ஆளு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தார். சிம்புவின் சொந்தப்படம் என்பது மற்றொரு காரணம். எல்லாம் திட்டமிட்டபடி சென்று கொண்டிருந்த நேரத்தில் திடீரென சிம்பு முரண்டு பிடிக்க ஆரம்பித்தார். படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வருவதில்லை. வந்தாலும் கேரவனுக்குள் புகுந்துகொண்டு மணிக்கணக்கில் வெளியே வருவதில்லை என்று சேட்டையை ஆரம்பித்த சிம்பு ஒரு கட்டத்தில் இது நம்ம ஆளு படத்துக்கு கொடுத்த கால்ஷீட்டை கேன்சல் பண்ணிவிட்டு, லண்டன், பெங்களுரு என்று கிளம்பிவிட்டார்.
பொறுத்துப் பொறுத்துப்பார்த்த பாண்டிராஜ், இந்தப் படத்தையே ட்ராப் பண்ணிடலாம். நான் செலவு பண்ணின ஒன்றரை கோடி பணத்தை வட்டியோடு திருப்பிக் கொடுங்க என்று டி.ராஜேந்தரிடம் கேட்க ஆரம்பித்திருக்கிறாராம்.
புகைச்சல் தொடங்கிவிட்டது...!