'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இலங்கையில் நடந்த இறுதி போரில் கொல்லப்பட்ட தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்ரியாவின் வாழ்க்கையை மையமாக வைத்து போர்க்களத்தில் ஒரு பூ என்ற பெயரில் ஒரு படம் தயாராகியுள்ளது. கன்னட இயக்குனர் கு.கணேசன் இயக்கி உள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இளையராஜா பேசியதாவது: எவ்வளவு பெரிய வன்முறையாளனாக இருந்தாலும் அவனுக்குள் இருக்கும் மனசை தட்டி எழுப்பும் வல்லமை இசைக்கு மட்டும்தான் இருக்கிறது. இசையை விட்டால் மனிதனுக்கு வேறு ஆறுதலே கிடையாது. இசை ஒரு போதும் வன்முறையை தூண்டாது. ஆனால் இப்போது இசைக்குள் வன்முறை வந்துவிட்டது. அதுதான் வேதனையாக இருக்கிறது.
இசையில் என்ன வன்முறை என்று நீங்கள் யோசிக்கலாம். ஒரு பாட்டை கேட்கும்போது திடீரென்று தேவையில்லாமல் ஒரு குரலோ அல்லது சத்தமோ வரும் இல்லையா, அதுதான் இசை வன்முறை. அது இப்போது அடிக்கடி நடக்கிறது. எல்லோருடைய வாழ்க்கைக்கும் இசை முக்கியம். அதுவும் இன்றைய காலத்தின் வேகத்தை பார்க்கும்போது இசை இல்லாத உலகத்தை நினைத்து பார்க்கவே முடியவில்லை.
இவ்வாறு இளையராஜா பேசினார்.