‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
முன்பெல்லாம் புகழ்பெற்ற நடிகர்-நடிகைகள் இறந்த பிறகுதான் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுப்பார்கள். ஆனால் இப்போதோ அவர்கள் வாழும்போதே அவர்களைப்பற்றிய கதையில் படங்கள் தயாராகின்றன. அந்த வகையில், இந்தியில் பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தற்போது ஒரு படம் தயாராகிறது.
அதேபோல். மலையாளத்தில் புகழ் பெற்ற நடிகர் மம்மூட்டியின் வாழ்க்கை கதையை மையப்படுத்தி ஒரு படம் தயாராகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு என 300 படங்களில் நடித்துள்ள மம்மூட்டியின் வாழ்க்கை கதைக் நட்சத்திரங்களுடே ராஜகுமாரன் என்று பெயர் வைத்துள்ளனர். நேரம் படத்தில் நடித்த நிவின் பாலி இதில் மம்மூட்டி வேடத்தில் நடிக்கிறாராம்.
மலையாள டைரக்டர் ஜூட் ஆண்டனி என்பவர் இயக்கும் இந்த படத்தில் மலையாள நடிகர்கள் இந்திரஜித் சுகுமாரன் சுகுமாரனாகவும், வினீத் சீனிவாசன் சீனிவாசனாகவும் நடிக்கிறார்களாம். அதோடு, குஞ்சக்கோ போபன் பிரேம் நசீர் வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் மோகன்லால் வேடத்தில் நடிக்க ஒரு முக்கிய நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறதாம். இவர்களுடன் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் மம்மூட்டியின் மகனாகவே நடிக்கிறாராம்.