'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
லத்திகா என்ற படத்தை தயாரித்து நடித்த பவர்ஸ்டார் சீனிவாசன், அந்த படத்தை வெளியிட்டபோது செய்த பப்ளிசிட்டி பரபரப்பைக்கண்டு அசந்து போன நடிகர்களில் சந்தானமும் ஒருவர். அதனால்தான் அவரை தனது நண்பன் சேதுவுக்காக தான் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் இன்னொரு ஹீரோவாக நடிக்க வைத்தார்.
அந்த படத்தில் பவர்ஸ்டார் கொடுத்த நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டதால், அதையடுத்து பல படங்களில் கமிட்டானார். ஆனால், எதிர்பாராவிதமாக மோசடி வழக்கில் அவர் சிறைக்கம்பி எண்ண சென்றதையடுத்து, அவருக்கான பட வாய்ப்புகள் குறைந்தன. இருப்பினும் பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், மறுபடியும் படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டினார்.
ஆனால், அதையடுத்து எதிர்பார்த்தபடி அவருக்கு யாரும் சான்ஸ் கொடுக்க முன்வரவில்லை. அதற்கு முக்கிய காரணம், ஜெயிலுக்கு செல்வதற்கு முன்புவரை தான் நடித்த பல படங்களுக்கு பைனான்ஸ் உதவி செய்து வந்தார் பவர்ஸ்டார். ஆனால் மோசடி வழக்கு பிரச்னைக்குபிறகு அவரது பண வரவு செலவு அனைத்தும் முடக்கப்பட்டதால், அவரால் யாருக்கும் பைனான்ஸ் தர முடியாது நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால்தான், இப்போது அவர் யாரிடம் சான்ஸ் கேட்டாலும், ஏதாவது பைனான்ஸ் உதவி செய்ய முடியுமா எனறு கேட்பவர்கள், இவர் தனது நிலையை சொன்னதும் அப்புறம் பார்க்கலாம் என்று கட் பண்ணி விடுகிறார்களாம். இதனால்தான் படங்களே இல்லாத நிலைக்கு தற்போது தள்ளப்பட்டிருக்கிறார் பவர்ஸ்டார்.