தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான் இன்று (மே 23) உலகம் முழுவதும் ரிலீசானது. உலகம் முழுவதும் 6 ஆயிரம் தியேட்டர்கள், இந்தியாவில் 3 ஆயிரம் தியேட்டர்கள், தமிழ்நாட்டில் 500 தியேட்டர்கள், சென்னை மற்றும் அதன் சுற்றுபுறங்கள் சேர்த்து 70 தியேட்டர்களில் கோச்சடையான் இன்று ரசிகர்களுக்கு தரிசனம் தந்தார். கோச்டையானுடன் சில படங்கள் ரிலீசாக திட்டமிட்டிருந்தன. அவைகள் பின்வாங்க கோச்சடையான் என்கிற சிங்கம் சிங்கிளாகவே களம் இறங்கியது.
கோச்சடையான் ரிலீசாவதையட்டி நேற்று இரவே ரஜினி ரசிகர்கள் தியேட்டர்களை அலங்கரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். கட்அவுட்கள், பேனர்கள் என தியேட்டரை திருவிழா கோலம் பூண வைத்தனர். தியேட்டர் முன் அதிகாலையிலேயே திரண்ட ரசிகர்கள் ரஜினியை வாழ்த்தி வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். ஒரு வாரம் வரை ரிசர்வ் செய்யப்பட்டுவிட்டதால் பெரும்பான்மையான தியேட்டர்களில் கவுண்டர் நெரிசல் இல்லை. முன்பதிவு செய்யாத தியேட்டர்கள் முன் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பல ஊர்களில் ரசிகர்கள் ஊர்வலமாக தியேட்டருக்கு வந்தனர். படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு வெயிலை சமாளிக்க தண்ணீர் பந்தல், மோர் பந்தல்களை அமைத்திருந்தனர். ரஜினியின் கட்அவுட்டிற்கு ராட்சத மாலைகளை அணிவித்து மகிழ்ந்தனர். பல இடங்களில் பாலாபிஷேகமும் நடந்தது. சென்னை போர்பிரேம் தியேட்டரில் காலை 9 மணிக்கே பத்திரிகையாளர்கள் கோச்சடையானை கண்டு களித்தனர். அதேபோல தமிழ்நாடு முழுவதும் பல தியேட்டர்களில் காலை 8 மணிக்கே ரசிகர்கள் காட்சி நடந்தது.
ரஜினி அறிமுகமாகும் காட்சியிலும், கோச்சடையானும், ராணாவும் மோதும் காட்சியிலும், கோச்சடையான் ஆடும் ருத்ரதாண்டவம் காட்சியிலும் அரங்கம் அதிர்ந்தது. விசில்கள் பறந்தது. பல வருடங்களுக்கு பிறகு ரசிகர்கள் விசிலடித்தும், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தும் கொண்டாட்டமாக படத்தை பார்த்து ரசித்தனர்.
மொத்தத்தில், கோச்சடையானை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். இனி கோச்சடையானின் வெற்றி பயணம் தொடரும் என்று சினிமா பார்வையாளர்கள் கணிக்கிறார்கள்.