நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
மறைந்த என்.டி.ராமாராவின் மருமகன்தான் சந்திரபாபு நாயுடு. என்.டி.ஆரின் மறைவுக்கு பிறகு தெலுங்கு தேசம் கட்சியை கைப்பற்றி முதல்வரானார். இப்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதல்வராக இருக்கிறார். என்.டி.ராமாராவின் குடும்பமே சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக நின்றபோது என்.டி.ஆரின் மகன் பாலகிருஷ்ணா சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக இருந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இந்துபூர் சட்டமன்ற தொகுதியில் தெலுங்கு தேசம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் பாலகிருஷ்ணா.
சந்திரபாபு நாயுடு வருகிற ஜூன் 2ந் தேதி சீமாந்திராவின் முதல் முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார். தற்போது மந்திரிசபை பட்டியலை உருவாக்கி வருகிறார். அதில் பாலகிருஷ்ணாவை முக்கிய இலாகாவின் அமைச்சராக்குவார் என்று ஆந்திரா மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகிறது. பாலகிருஷ்ணா அமைச்சராக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவும், அறிக்கைகள் மூலமாகவும் சந்திரபாபு நாயுடுவுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.