டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் விஜய், அஜீத் இருவருக்கும் அதிகப்படியான ரசிகர்கள் இருந்தனர். தாங்கள் வளருவதற்கு ரசிகர் மன்றங்கள் முக்கியம் என்பதால் பெருந்தொகையை செலவு செய்து ரசிகர் மன்றங்களை வளர்த்து வந்தனர். ஆனால், ஒரு கட்டத்தில் அஜீத் தனது ரசிகர்கள் மன்றங்களை கலைத்து விட்டார்.
காரணம், அந்த சமயத்தில் நடந்த ஒரு சட்டமன்ற தேர்தலின்போது, அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக கொடி பிடித்தனர். அதனால், தனது ரசிகர் மன்றத்தில் அரசியல் வந்து விட்டதால் அவசரகதியில் மன்றங்களை கலைத்தார். அதன்பிறகு இன்னமும் ரசிகர் மன்றங்களில் அவர் ஆர்வம் காட்டவில்லை.
அவரைத் தொடர்ந்து இப்போது மலையாள நடிகர் மம்மூட்டியும் தனது ரசிகர் மன்றங்களை கலைத்துள்ளார். காரணம், தொழில்ரீதியாக மம்மூட்டிக்கு சிலருடன் கருத்து வேறுபாடு ஏற்படும்போது, அவரது ரசிகர்கள் அந்த நபர்களை பேஸ்புக்கில் கண்டபடி வசைபாடுகிறார்களாம். இதனால் மம்மூட்டிக்கும் அவர்களுக்குமிடையே உள்ள பிரச்னை அதையடுத்து விஸ்வரூபமெடுத்து விடுகிறதாம்.
இது தொடர்ந்து நடந்து வந்ததால், சமீபத்தில் மலையாள டைரக்டர் உன்னி கிருஷ்ணன் என்பவரை மம்மூட்டி ரசிகர்கள் ரொம்ப அசிங்கமான வார்த்தைகளால் விமர்சித்ததையடுத்து இப்போது தனது ரசிகர் மன்றங்கள் மொத்தத்தையும கலைக்கப்போவதாக அறிவித்துள்ளார் மம்மூட்டி.