ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆபாச புயல் என்ற அடைமொழியுடன் இளவட்ட ரசிகர்களை சூடேத்தி வரும் சன்னி லியோன் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்றால், பாலிவுட் சென்சார் போர்டு அதிகாரிகள் கத்திரிக்கோலும் கையுமாகத்தான் திரிவார்களாம். சில படங்களில் அவர் நடித்த பாடல் காட்சிகளை கண்டதுண்டமாக கத்தரித்து விட ரீ-ஷூட் பண்ணிய கலவரங்களும் நடந்திருக்கிறதாம். அதேபோல் வசன காட்சிகளில்கூட இவர் நடிக்கும் அலங்கோலமான காட்சிகளை போராடித்தான் வெளியே கொண்டு வருவார்களாம் டைரக்டர்கள்.
அதனால் அப்படிப்பட்ட சன்னிலியோன், தமிழில் ஜெய் நடித்துள்ள வடகறி படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடியிருக்கிறார் என்றதும், தமிழ் சினிமா சென்சார்போர்டு அதிகாரிகளை கத்தியை தீட்டிக்கொண்டு காத்திருந்தார்களாம். ஆனால், படத்தை பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்து போனார்களாம். காரணம், நம்ம ஊர் கதாநாயகிகள் காண்பிக்கும் கவர்ச்சியை கூட சன்னி காட்டவில்லையாம். பக்கா குடும்ப குத்து விளக்காட்டம் ஜொலித்தாராம்.
குறிப்பாக, அவர் நடனமாடியிருந்த பாடல முழுக்க பாவாடை-தாவணி கெட்டப்பில் கண்ணியமாக ஆடியிருந்தாராம். இதனால் க்ளீன் 'ஏ' சான்றிதழ்தான் இந்த படத்துக்கு கொடுக்க வேண்டிவரும் என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தவர்கள், படத்தைப்பார்த்துவிட்டு, இப்போது க்ளீன் 'யு' சான்றிதழ் கொடுத்திருக்கிறார்களாம். இந்த செய்தி கோடம்பாக்கத்தில் கசிந்ததை அடுத்து அனைவருமே பேரதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.