'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த், டி.வி.நிகழ்ச்சி மூலம் மணமகன் தேடுவார், தீடீரென்று டாப்லெஸ் போஸ் கொடுத்து மிரட்டுவார். இப்படி பரபரப்பிலேயே தன்னை வைத்துக் கொள்ளும் ராக்கி சாவந்துக்கு மக்கள் வைத்தார்கள் பெரிய ஆப்பு.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பல கட்சிகளிடம் வாய்ப்பு கேட்டார். கிடைக்காததால் தானே ராஷ்ட்ரிய ஆம் ஆத்மி என்ற கட்சியை தொடங்கி வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டார். தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்தார். "நீங்கள் என்னை காசு கொடுத்து தியேட்டரில்தான் பார்க்க முடியும் இதோ இப்போது உங்கள் முன்னால் இலவசமாக காட்சி தருகிறேன் எனக்கு வாக்களியுங்கள்" என்று பிரச்சாரம் செய்தார். சும்மாவே பரபரப்பு கிளப்புகிறவர் பாராளுமன்றத்துக்குள் நுழைந்தால் என்ன ஆகும் என்று மக்கள் யோசித்திருப்பார்கள் போலிருக்கிறது. தேர்தலில் ராக்கியை படுதோல்வி அடையச் செய்து விட்டார்கள். வெறும் 8 ஆயிரம் ஓட்டுகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை பறிகொடுத்தார்.
இந்த தோல்வியை ராக்கியால் தாங்கிக் கொள்ள முடியில்லை ராஷ்டிரிய ஆம் ஆத்மி கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக தலைவர் கிருஷ்ணாலாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். (ராக்கி நியமித்த தலைவர்தான்) என்னுடைய சுய விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்கிறேன். இனிமேல் என்னால் எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்.
தேர்தலில் பிரச்சாரத்திற்கு வெயிலில் அலைந்ததால் ராக்கியின் அழகு பாதி குறைந்து விட்டதாகவும் அந்த அழகை மெருகேற்ற இனி 6 மாதத்திற்கு அவர் பியூட்டி பார்லரிலேயே இருப்பார் என்று அவரது நண்பர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது.