நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? |
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க போட்டியிட்ட 39 தொகுதிகளில் 37ல் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதனை பாராட்டி திரைப்படத்துறையின் அனைத்து பிரிவுகளும் அறிக்கை வெளியிட்டன. நான்கு நாட்களுக்கு பிறகு இயக்குனர்கள் சங்கம் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி அறிக்கை விடுத்துள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் முந்தைய சாதனைகளை முறியடித்து சரித்திர சாதனை படைத்து விட்டீர்கள். அம்மா உணவகம், அம்மா குடிநீர், மாணவர்களுக்கு மடிகணினி, வழங்கினீர்கள். காவிரி நதிநீர் பங்கீட்டு முறையை அரசிதழில் பதிவு செய்ய வைத்தீர்கள், முல்லை பெரியார் அணைக்கு நீதி பெற்றுத் தந்தீர்கள்.
இப்படி நல்ல திட்டங்களை அள்ளித் தரும் நீங்கள், திரைப்படத் துறைக்கும் நல்ல திட்டங்களை அறிவித்திருக்கிறீர்கள். குறைந்த கட்டணத்தில் மக்கள் படம் பார்ப்பதற்காக பட்ஜெட் திரையரங்குகள் உருவாக்க இருக்கிறீர்கள். இருண்டு கொண்டிருந்த தமிழ் திரைப்பத்துறையினரின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்திருக்கிறீர்கள்.
இதற்காக தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.