டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மூன்று வருடங்களுக்கு பிறகு தெனாலிராமன் மூலம் ரசிகர்களை சந்தித்த வடிவேலுவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. விளைவு, அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அடுத்தடுத்து அவரை வைத்து படம் இயக்க முன்வந்திருந்த பலர் இப்போது பின்வாங்கி விட்டனர். அதோடு, கதை சொல்லிவிட்டு காத்திருந்த படாதிபதிகளும்கூட பைனான்ஸ் இன்னும் கைக்கு வரவில்லை. அதனால் கொஞ்சம் தாமதமாக படத்தை தொடங்கலாம் என்று நழுவி விட்டனர்.
அதனால், இவர்களையெல்லாம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தால் அடுத்த படத்தை வெளியிட இன்னும் மூன்று வருடமாகி விடும் என்று நினைத்த வடிவேலு, இதுவரை எடுக்காத ரிஸ்க்கை எடுக்கத் தயாராகி விட்டார். அதாவது இந்த முறை தனது சொந்த பணத்திலேயே நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
மேலும், மீண்டும் தெனாலிராமனை இயக்கிய யுவராஜ் தயாளனையே இயக்குனராக்கியிருக்கும் வடிவேலு, சிரிப்பு படம் என்று சொன்ன தெனாலிராமன் படம் சிரிப்பையே வரவழைக்கவில்லை என்று பலரும் கருத்து சொன்னதையடுத்து, ஒரு முழுநீள காமெடி படத்தை கொடுத்து விட வேண்டும் என்று தற்போது தீவிர கதை விவாதத்திலும் இறங்கியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி, இதுவும் சரித்திர காலத்து கதைதானாம். அதேசமயம், நூறு சதவிகிதம் காமெடிக்கு கியாரண்டி இருக்க வேண்டும் என்பதால், தனது சொந்த கற்பனையில் உதித்த காமெடி காட்சிகளையும் கதைக்குள் திணித்துக்கொண்டிருக்கிறாராம் காமெடி புயல்.