ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் டி.வி காம்பையரான சிவகார்த்திகேயனை தனது மெரினா படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்தவர் டைரக்டர் பாண்டிராஜ். அவர் டிவியில் இருந்து வந்தவரை ஹீரோ ஆக்குகிறார் என்றதும், பலர் தொடர்பு கொண்டு எதற்காக தேவையில்லாத ரிஸ்க் எடுக்கிறீர்கள் என்று அட்வைஸ் செய்தார்களாம். ஆனபோதும், சிவகார்த்திகேயனை வைத்து படமெடுத்து ஹிட் கொடுப்பேன் என்று தன்னம்பிக்கையுடன் அந்த படத்தை தொடங்கினாராம் பாண்டிராஜ்.
அப்படி ஜெயித்தும் காட்டிய அவர், அதையடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்காவிலும் விமலுக்கு இணையான வேடத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைத்தார். அந்த படமும் ஹிட்டடிக்கவே பின்னர் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எகிறத் தொடங்கியது. அதனால் வேகவேகமாக புதிய படங்களில் கமிட்டாகி தற்போது கைவசம் மூன்று படங்களை வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இந்த நிலையில், தற்போது சிம்புவைக்கொண்டு இது நம்ம ஆளு படத்தை இயக்கி வரும் பாண்டிராஜ்க்கு மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கும் ஆசை ஏற்பட்டுள்ளதாம். இதுபற்றி அவர் சிவகார்த்திகேயனிடம் சொன்னபோது, தான் பிசியாக இருப்பதாக சொன்னவர், கதையை ரெடி பண்ணி வையுங்கள். இந்த படங்களில் ஏதாவது தாமதம் என்றால் அந்த கேப்பில் நாம் ஒரு படம் பண்ணி விடலாம் என்று சொல்லியிருக்கிறாராம்.
இதனால், ஒருவேளை சிம்பு இன்னும் இழுத்தடித்தால், அதற்குள் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை பாண்டிராஜ் இயக்கி ரிலீஸ் செய்து விடுவார் என்று தெரிகிறது.