தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தன் தம்பி சத்யாவை வைத்து தயாரித்த படித்துறை படத்தை கிடப்பில் போட்டுவிட்டு, அடுத்து ஆரம்பித்த படம் - அமரகாவியம். தன்னுடைய சொந்தப்பட நிறுவனமான தஷோ பீப்பிள் என்ற புதிய பட நிறுவனத்தின் மூலம் ஆர்யா தயாரித்துள்ள அமரகாவியம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அமரகாவியம் படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்த பின்னர் தயாரிப்பாளர் என்ற முறையில் ஆர்யாவும் அவருடைய ஓரிரு நண்பர்களும் சில தினங்களுக்க முன் அமரகாவியம் படத்தைப் பார்த்தனர்.
படம் முடிந்தவுடன் ஆர்யாவின் கண்களில் கண்ணீர் துளிகள் தென்பட, ஈரமான கண்களுடன் யாரிடமும் பேசாமல் அவர் திரை அரங்கை விட்டு வெளியே வந்து காரில் ஏறி போய்விட்டாராம். எதையும் மறைத்து பேசி பழக தெரியாதவர், வெளிப்படையாகப் பேசக்கூடியவர் என்ற அறியப்படும் ஆர்யா படத்தைப் பார்த்துவிட்டு ஒன்றுமே கருத்து சொல்லாமல் சென்றது இயக்குநர் தரப்பை அப்ஸெட்டாக்க...
தான் கதாநாயகனாக நடிக்கும் மற்றொரு படத்தின் படப்பிடிப்புக்கு சென்ற ஆர்யா என்ன நினைத்தாரோ, சட்டென தனது உதவியாளரை அழைத்து 143 கேக் வாங்கி வரச் சொன்னாராம். கேக் வந்தவுடன் தனது பட குழுவினருக்கு கொடுத்து மகிழ்ந்திருக்கிறார். அது என்ன 143 கேக்?
143 என்கிற எண் காதலுக்கு மிக முக்கியமான எண் என விளக்கம் கொடுத்தார், “ஐ லவ் யூ என்ற அந்த மூன்று முக்கிய வார்த்தைகளின் இன்னொரு வடிவம் தான் 143. படம் பார்த்த வினாடியே பரவசத்தில் எனக்கு தோன்றிய முதல் செய்கைதான் இது என்றார்.
அமரகாவியம் படத்தை பற்றி ஆர்யா என்ன சொல்கிறார்?
“ஒரு நடிகனாக நான் சினிமாவில் பல படங்களை பார்த்து இருக்கிறேன். அந்த மனநிலையே வேறு...ஆனால் முதல் முறையாக ஒரு தாயாரிப்பாளர் என்ற முறையில் அமர காவியம் பார்த்து எனக்கு கிடைத்த பிரமிப்பும், பெருமிதமும் சொல்லில் அடங்காதவை. இந்த உணர்வு என்னை மேலும் தரமான படங்களை தர வேண்டும் என சொல்ல வைக்கிறது" என்றார்.
நிஜ வாழ்க்கையில் காதல் மன்னனாக வாழ்ந்து வரும் ஆர்யா தான் தயாரிக்கும் படத்துக்கு அமர காவியம் என்ற காதல் கதையை தேர்ந்து எடுத்தது மிகப்பொருத்தமான விஷயம்தான்.