ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்ற வருடம் ரஜினியின் பிறந்த நாளுக்காக வீடியோ ஆல்பம் தயாரித்தவர் ராகவா லாரன்ஸ். அந்த ஆல்பம் ரஜினி ரசிகர்களிடம் மட்டுமல்ல அனைவரிடமும் அமோக வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, பாரத பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள நரேந்திர மோடியை வருங்கால இந்தியாவை திறம்பட ஆட்சி செய்யும் வல்லமை படைத்தவர் என்று பாராட்டி “மீண்டும் ஒரு சுதந்திரம்” என்ற இசை வீடியோ ஆல்பத்தை உருவாக்குகிறார் ராகவா லாரன்ஸ்.
இந்த ஆல்பம் உருவாவதற்கு காரணமே, இதுவரை நமது இளைஞர்களுக்கு நாம் தன்னம்பிக்கை ஊட்ட வேண்டுமானால் “செருப்பு தைத்த ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதியானதைப் பற்றி கூறுவது தான் வழக்கமாக இருந்தது. இனி இந்தியாவில் டீ விற்ற இளைஞனும் பிரதமராக முடியும் என்று நிரூபித்த நரேந்திர மோடியை நாம் இனி சுட்டிக் காட்டக் கூடிய தன்னம்பிக்கை சிகரமாக விளங்குபவர் நரேந்திர மோடி இதற்காகத் தான் இந்த இசை ஆல்பம். நான் எந்த ஒரு செயல்களை செய்தாலும் எனது குருநாதர் கே.பாலசந்தரிடம் ஆசி பெற்றுத் தான் செய்வது வழக்கம். இந்த இசை ஆல்பமும் கே.பி. சாரிடம் ஆசி பெற்றே ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
விரைவில் இந்த இசை ஆல்பம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.