தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லைவ் ஷோக்களில் விதவிதமான நிகழ்ச்சிகள் வந்து விட்டது. அது ஆன்மிகத்தையும் விட்டு வைக்கவில்லை. இன்ராக்டிவ் டி.வி முதன் முறையாக புதுமையான ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது. அந்த நிகழ்ச்சிக்கு பெயர் ஐ பிரார்த்தனை. தினமும் காலை 7 மணிக்கு இது ஒளிபரப்பாகிறது.
நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு புகழ்பெற்ற கோயிலை காட்டி அதன் அருமை பெருமைகளை சொல்லிக்கொண்டிருப்பார்கள். தல வரலாறு பற்றி பேசுவார்கள். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் நேயர்கள். அந்த கோவிலில் உள்ள சாமிக்கு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று நினைத்தால் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது அதன் அடியில் ஒரு தொலைபேசி எண் இருக்கும். அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசி தங்கள் பெயர், ராசி, நட்சத்திரத்தை சொன்னால். ஒரு அர்ச்சகர் தோன்றி உங்கள், பெயர், ராசி, நட்சதிரத்தை சொல்லி அர்ச்சனை செய்வார். அது அப்படியே நேரடியாக ஒளிபரப்பாகும். நீங்கள் உங்கள் பெயரில் அர்ச்சனை நடப்பதை வீட்டில் இருந்தபடியே டி.வி.திரையில் பார்த்து சாமியை கும்பிட்டுக் கொள்ளலாம்.
"அர்ச்சனைக்கு தினமும் ஒரு கோயில் விசேஷமானது இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் தினமும் ஒரு கோயிலுக்கு போவது இயலாத காரியம். இந்த நிகழ்ச்சி மூலம் கோயிலுக்கு போக முடியாதவர்கள் தங்கள் இஷ்டதெய்வத்துக்கு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ளலாம்" என்கிறார்கள் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.
நிகழ்ச்சி புதுமையாக இருக்கிறது. இது வெற்றி பெற்றால் அப்படியே காப்பி அடித்து பெரிய சேனல்காரர்கள் நடத்த தொடங்கி விடுவார்கள்.