மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
"பணம் காசு முக்கியமில்லை. பாராட்டும், அங்கீகாரமும் தான் தேவை' எனக் கூறாத நடிகர், நடிகைகளே கிடையாது. இதைப் புரிந்துகொண்ட அரசு, ஆண்டுக்கொரு முறை "கலைமாமணி' பட்டம் கொடுத்து அவர்களை கவுரவப்படுத்தி வருகிறது. இதை விட "செறிவுமிக்க' பட்டங்களை சுயமாகத் தேர்வு செய்து சூட்டிக்கொள்ளும் இவர்களுக்கு, "கலைமாமணி'யில் நாட்டம் இல்லாதது இயல்பே. அதனால்தான், "கலைமாமணி' பட்டம் பெற்ற நட்சத்திரங்களில் 90 சதவீதம் பேர், இதைக் கண்டுகொள்ளுவதே இல்லை.
அரசு அளித்த கவுரவத்தை ஆமோதிக்கும் வகையில் செயல்படுவர்களில், நடிகை ஜெயசித்ராவும் ஒருவர். தனது மகன் அம்ரேஷை ஹீரோவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஜெயசித்ரா, "நானே என்னுள் இல்லை' என்ற படத்தை இயக்குகிறார். இதற்கான விளம்பரத்தில், "கலைமாமணி ஜெயசித்ரா' என குறிப்பிட்டுள்ளார். அரசின் பட்டத்துக்கு கவுரவம் சேர்த்த இவருக்காக, அடுத்தடுத்து ஏதாவது பட்டமும், பாராட்டும் கொடுத்தால் நலம்!