டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ராதாவின் மகள் கார்த்திகா மலையாளத்தில் கோல்டு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். பிரபல இயக்குனர் ராஜேஷ் பிள்ளை இயக்குவதாக இருந்தது. இது ஒரு ஓட்டபந்தய வீராங்கணை பற்றிய கதை. கிட்டத்தட்ட பி.டி. உஷாவின் கதை. தற்போது இந்தப் படம் கைவிடப்பட்டுள்ளது.
இது பற்றி கார்த்திகா கூறியிருப்பதாவது: கோல்டு டிராப்பானதுல நான் ரொம்பவே அப்செட். அது ஹீரோயினுக்கு முக்கியத்தும் உள்ள கதை. ரொம்ப எதிர்பார்ப்போட சைன் பண்ணினேன். பி.டி.உஷாகிட்ட ஓட்டபந்தய பயிற்சியெல்லாம் எடுத்துகிட்டேன். உஷா எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தாங்க. எல்லாமே வீணாப்போச்சு. படம் நின்று போனதில் ரொம்பவே வருத்தம்தான். என்ன பண்றது எதுவுமே நம்ம கையில இல்லியே.
தமிழில் கோ படத்துக்கு முன்பே நடிச்ச மலையாள படமான மகரமஞ்சு தமிழ்ல அப்சரஸ்ங்ற பேர்ல வர்றாத சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு. சந்தோஷ் சிவன் சார் இயக்கி நடிச்ச பீரியட் ஆர்ட் பிலிம் அது. இரட்டை வேடத்துல நடிச்சிருக்கேன். தெலுங்குல அல்லரி நரேஷ் ஜோடியா ஒரு படத்துல நடிக்கிறேன். தமிழ்ல புறம்போக்கு படத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன். என்கிறார் கார்த்திகா.