டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது ரசிகர் மன்றங்களை அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட வைத்தவர் விஜய். ஆனால் அதையடுத்து அதிமுக வெற்றி பெறுவதற்கு நாங்களே காரணம் என்பது போல் சில மேடைகளில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியது, ஜெயலலிதாவை கோபத்துக்கு ஆளாக்கியது. அதன் வெளிப்பாடுதான் அதையடுத்து திரைக்குவந்த விஜய் படங்கள் பலவிதமான சிக்கல்களை சந்தித்தன.
இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வந்த நரேந்திர மோடி, ரஜினியை நட்பு ரீதியாக சந்தித்தவர், அதையடுத்து கோவை சென்ற இடத்தில் விஜய்யையும் சந்தித்து பேசினார். அதையடுத்து, ரஜினி,. விஜய் இருவருமே மோடியை சிறந்த மனிதர், சிறந்த தலைவர் என்று மனதார பாராட்டி கருத்து வெளியிட்டனர்.
இந்த நிலையில், நடந்து முடிந்துள்ள பாராளுமன்ற தேர்தலில், இந்திய அளவில் பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடியும். தமிழகம் அளவில் ஜெயலலிதாவும் பெரும்பான்மை வெற்றிகளை பெற்றிருக்கிறார்கள். இதையடுத்து. அவர்கள் இருவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் விஜய்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவை ஒரு வல்லரசாக மோடியும், தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஜெயலலிதாவும் மாற்றிக்காட்டுவார்கள் என்ற நம்பிக்கையில் கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவனாக இந்த மகத்தான வெற்றிகளைக்கண்டு சந்தோசமடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.