‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழ் சினிமாவின் முக்கிய இசை அமைப்பாளர்களில் ஒருவர் வித்யாசாகர். 2010ம் ஆண்டு ஒரு வருடத்தில் 5 திரைப்படங்களுக்கு இசை அமைத்து முதல் இடத்தில் இருந்தார். அதற்கு பிறகு அவர் இசை அமைக்கும் படங்கள் மிகவும் குறைந்து விட்டது. 2011ம் ஆண்டு தம்பி வெட்டோத்தி சுந்தரம் என்ற படத்திற்கு மட்டும் இசை அமைத்தார். 2012ம் ஆண்டு எந்த தமிழ் படத்திற்கும் இசை அமைக்கவில்லை. 2013ம் ஆண்டு 3 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
இந்த ஆண்டு இதுவரைக்கும் படங்கள் இல்லை. தற்போது விக்ரம் நடிப்பில் தரணி இயக்க இருக்கும் படத்திற்கு இசை அமைக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கிறது. தற்போது மலையாள படங்களில் அதிகமாக இசை அமைத்து வரும் வித்யாசாகர் தமிழ் படங்களை புறக்கணிக்கிறாரா? அல்லது தமிழ் வாய்ப்புகள் கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை.
பூவெல்லாம் உன் வாசம், ரன், தூள், கில்லி, மொழி, அன்பே சிவம், பார்த்திபன் கனவு, சந்திரமுகி படங்களில் இசை சாம்ராஜய்த்தை நிகழ்த்திக் காட்டிய வித்யாசாகர் இப்போது மவுனித்து இருப்பது ஏன்? அவர்தான் விடை சொல்ல வேண்டும்.