கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
மாஜி நடிகை ராதாவின் மகளான கோ பட நாயகி கார்த்திகாவுடன் அவரது முதல் படத்தலேயே நடித்தவர் ஜீவா. அநத வகையில், கார்த்திகாவின் கேரியரில் முக்கியமானவராகி விட்டார் ஜீவா. அதேபோல், கார்த்திகாவின் தங்கை துளசியின் இரண்டாவது பட நாயகனாகி விட்டார். முதல் படத்தில் கெளதமுடன் நடித்திருந்த துளசி இப்போது ஜீவாவுடன் நடித்திருக்கும் யான் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்.
இந்த படத்தில் முந்தைய படத்தில் செய்த தவறுகளை சரி செய்து, கதைப்படி ராணுவ அதிகாரி மகளாக கனகச்சிதமாக நடித்திருக்கிறாராம் துளசி. அவரது உடல்கட்டு, நடைஉடை பாவணைக்கு அந்த கேரக்டர் கச்சிதமாக பொருந்தி விட்டதாக அப்பட டைரக்டர் ரவி.கே.சந்திரன் மட்டுமின்றி ஜீவாவும் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
மேலும், துளசியின் நடிப்பு குறித்து ஜீவா கூறுகையில், துளசியுடன் நடிக்கும்போது எனக்கு பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. ஆனால், சில காட்சிகளில் அவரது நடிப்பு பிரமிக்கத்தக்கதாக இருந்தது. அதையடுத்து, அவருக்கு முன்பு நாம் சோடைபோய்விடக்கூடாது என்று உஷாராக நடிக்கத் தொடங்கினேன் என்று சொல்லும் ஜீவாவிடம், கார்த்திகா-துளசி இருவருடனும் நடித்திருக்கிறீர்கள். அவர்களில் யார் திறமையானவர்கள்? என்று கேட்டால், இரண்டு பேருமே பர்பாமென்ஸ் ரீதியாக சிறந்த நடிகைகள்தான். யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது என்று செம பில்டப் கொடுத்தார்.
அதையடுத்து, இருவரில் யாராவது ஒருவரை குறித்து சொல்லுங்கள்? என்று அவருக்கு கிடுக்கிப்புடி போட்டால், எதுக்கு வம்புல மாட்டி விடுறீங்க. நான் எதையாச்சு சொல்லி வைக்க, நாளைக்கு இன்னொரு படத்துக்கு அவங்ககிட்ட கால்சீட் கேட்டா தரமாட்டாங்க. அதனால் நடிகைகளை நான் பகைச்சிக்கிட விரும்பல என்று சிரித்துககொண்டே சொல்லி எஸ்கேப் ஆனார் ஜீவா.