'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வாழ்க்கையில் இரண்டு முறை காதலில் விழுந்து ஏமாற்றப்பட்டவர் நயன்தாரா. ஆனால், அவர் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆனபோதும், ஆரம்பம், ராஜாராணி போன்ற படங்கள் அவருக்கு வெற்றியாக அமைந்ததால், ஏமாற்றங்களில் இருந்து விடுபட்டு மீண்டு மகிழ்ச்சியான பாதையில் பயணித்தார்.
அந்த நேரத்தில் இந்தியில் வித்யாபாலன் நடித்த கஹானி பட வாய்ப்பு வந்தபோது, பெரிய நம்பிக்கையுடன அந்த படத்தில் நடித்தார் நயன்தாரா. அதில் நடித்த பிறகு படத்தின் ப்ரமோஷன் காட்சிகளில் கலந்து கொள்ளாததால் அவருக்கும், தெலுங்கு டைரக்டர் சேகர் கமுலாவுக்கும் இடையே போர் வெடித்தது. அதனால் நயன்தாராவுக்கு யாரும் படம் கொடுக்காதீர்கள் என்று புகார் செய்து, நயன்தாரா தெலுங்கு படங்களில் நடிக்க தடை போட வைத்தார் அவர்.
இருந்தாலும் எதையும் கண்டுகொள்ளவில்லை நயன்தாரா. படம் வெற்றி பெற்று விட்டால், இந்த தடையெல்லாம் காணாமல் போய்விடும் என்று தில்லாக இருந்தார். ஆனால், இப்போது படம் பெரிய அளவில் ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டது. அதனால், தெலுங்கு சினிமாவில் தனக்கு போடப்பட்ட தடை நிரந்தரமாகி விடும் போலிருக்கு என்று அதிர்ச்சியடைந்துள்ளார் நயன்தாரா.
இந்த நிலையில், தமிழில் அவரை வைத்து விஜயசாந்தி பாணியில் ஆக்சன் படம் எடுக்க தயாராகிக்கொண்டிருந்த சில தயாரிப்பாளர்கள், நீ எங்கே என் அன்பே தோல்வியடைந்து விட்டால், ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெக்ட் நயன்தாராவுக்கு செட்டாகவில்லை என்று முடிவெடுத்து பின்வாங்கி விட்டனர். இதனால் கடந்த சில மாதங்களாகவே ஆக்சன் பயிற்சி எடுத்து வந்த நயன்தாரா, இப்போது அந்த பயிற்சியை கிடப்பில் போட்டு விட்டார்.