டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என்று தொடர் தோல்விகளை கொடுத்துள்ள செல்வராகவன், அடுத்தபடியாக சிம்பு-த்ரிஷாவை இணைத்து விண்ணைத்தாண்டி வருவாயா போனறு ஒரு ரொமான்டிக் படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். கெளதம்மேனனுக்கு கால்சீட் கொடுத்திருந்த சிம்பு, அந்த படத்தில் நடித்ததும் செல்வராகவன் படத்திலும நடிப்பதாக கூறியிருந்தார்.
அதன்காரணமாக, ஸ்கிரிப்ட் ஒர்க்கில் அவகரகதியில் ஈடுபட்டிருந்தார் செல்வராகவன். ஆனால் தற்போது படப்பிடிப்பு தொடங்கலாம் என்று அப்படத்தை தயாரிக்கயிருந்த பிவிபி நிறுவனத்திடம் அவர் படப்பிடிபபு ஏற்பாடுகளை செய்யச்சொல்லி கேட்டபோது, ஒரு பெரிய செக்கை வைத்து விட்டார்களாம்.
அதாவது, இரண்டாம் உலகம் படத்தை தயாரித்த அந்த நிறுவனம், அப்படம் ரூ. 20 கோடி வரை நஷ்டத்தை கொடுத்ததால், போட்ட பட்ஜெட்டை விட அதிகமாக செலவு பண்ண வைத்த செல்வராகவனிடம் நஷ்டத்தை ஷேர் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று கூறினார்களாம். பட்ஜெட் எகிறியதற்கு தானே காரணம் என்பதால் அதற்கு உடன்பட்டாராம் செல்வராகவன்.
ஆனால், இப்போது அடுத்த படத்தையும அவர்களை தயாரிக்க சொல்பவர், ஏற்கனவே பேசியபடி அவர் கொடுக்க வேண்டிய 10 கோடி நஷ்ட பணத்தை பிவிபி நிறுவனத்துக்கு கொடுக்கவில்லையாம். அதனால், அந்த கணக்கை முதலில் பைசல் பண்ணி விட்டு, புதிய கணக்கை தொடங்குவோம் என்று செல்வராகவனிடம் உறுதியாக சொல்லி விட்டார்களாம்.
அதனால், தான் கொடுக்க வேண்டிய 10 கோடியை கொடுத்தால் மட்டுமே அடுத்து படத்தை தொடங்க முடியும் என்கிற இக்கட்டான நிலையில் கையை பிசைந்து கொண்டு நிற்கிறார் செல்வராகவன்.