ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நான்கு வருடங்களுக்கு பிறகு சண்டமாருதம் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் சரத்குமார். அவரது மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் அவருடன் இணைந்து நடிப்பதுடன் படத்தை தயாரிப்பதும் அவர்தான். மயிலாப்பூர் அப்பர்சாமி கோவிலில் பூஜையுடன் படப்பிடிப்பு நேற்று (மே14) தொடங்கியது. கோவில் வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் "எல்லோருக்கும் நண்மையை கொடு, எல்லோருக்கும் லாபத்தை கொடு இறைவா" என்ற வசனத்துடன் சரத்குமார் நடித்த முதல் காட்சி படமானது. படப்பிடிப்பு இடைவெளியில் சரத்குமார் தினமலர் இணையதளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி:
150 படங்களை தாண்டிய ஹீரோ நீங்கள், எப்படி இவ்வளவு பெரிய இடைவெளி விட்டீர்கள்?
அரசியல்தான் காரணம். சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கிய பிறகு அரசியல் பணிகள் அதிகமானது. சட்டமன்ற உறுப்பினரான பிறகு மக்கள் பணி அதிகமானது. இதுதவிர நடிகர் சங்க பணிகள் வேறு. இப்படி உழைப்பும் கவனமும் வேறு பக்கங்களில் திரும்பி விட்டதால் இந்த இடைவெளி. அரசியலால் சினிமாவை கொஞ்சம் இழக்க வேண்டியது இருந்தது உண்மைதான். இனி சினிமாவிலும் தீவிர கவனம் இருக்கும்.
திடீரென சண்டமாருதம் ஆரம்பித்தது ஏன்?
என்னுடைய நண்பர்கள் மீண்டும் ஹீரோவாக நடியுங்கள். கேப் விட்டுவிட்டால் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மாற்றி விடுவார்கள். என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கோச்சடையானில் நடித்த போது ரஜினியே "சரத் நீங்க ஹீரோவா கண்டினியூ பண்ணுங்க. மிஸ் பண்ணாதீங்க. அது ராங்கா போயிடும்"னு சொன்னார். அதற்கு பிறகுதான் அடுத்து ஒரு படத்தில் ஹீரோவா நடிக்கிறதுன்னு முடிவு பண்ணினேன். அதுதான் சண்டமாருதம்.
கதையை நீங்களே எழுதியிருக்கீங்களே?
ரொம்ப நாளா என் மனசுல இருந்த கதை. இதுல வில்லன் கேரக்டருக்குத்தான் முக்கியத்தும் இருக்கும். பொதுவா இரண்டு வேடம் என்றால் ஒருவன் நல்லவான இருப்பான். இன்னொருவன் வில்லனாக இருப்பார். இந்த படத்தில் சர்வேஸ்வரன், ரவிங்க இரண்டு கேரக்டர் இருக்கு. இரண்டுமே நல்லலும் கெட்டதும் கலந்த கேரக்டர். இந்த கதையை வெங்கடேஷ்கிட்ட சொன்னதும் அவர் கொஞ்சம் மெருகேற்றிக் கொடுத்தார். ஆக்ஷன் த்ரில்லர் என்பதால் எழுத்தளார் ராஜேஷ்குமார் திரைக்கதை அமைத்து வசனம் எழுதிக் கொடுத்திருக்கிறார். நான் எப்போ கூப்பிட்டாலும் படம் இயக்கித் தருகிறவர்கள் கே.எஸ்.ரவிகுமாரும், வெங்கடேசும். ரவிகுமார் ரஜினி படத்தில் பிசியாகிவிட்டதால் வெங்கடேஷ் இயக்குகிறார்.
பொது வாழ்வில் இருக்கும்போது வில்லனாக நடிப்பது சரியாக இருக்குமா?
மக்கள் இப்போ ரொம்ப தெளிவு. சினிமாவையும், பொது வாழ்க்கையையும் ஒப்பிட்டு பார்க்கிறதில்லை. அதோட எனக்கும் நல்வனாகவே நடிச்சு போரடிச்சு போச்சு. ஒரு சேன்ஞ்சுக்காக வில்லனா நடிக்கிறேன்.
இடையில் சென்னையில் ஒரு நாள், நிமிர்ந்து நில், காஞ்சனான்னு கெஸ்ட் ரோல்ல நடிச்சீங்களே...?
அதை கெஸ்ட் ரோல்னு சொல்ல முடியாது. கதைக்கு திரும்புமுனையா இருக்கிற முக்கியமான கேரக்டர்கள். சில படங்கள் நட்புக்காக, சில படங்கள் சொந்த தயாரிப்புக்காக பண்ணினேன். நான் அப்படி நடிச்ச படங்கள் எல்லாமே ஹிட்டாகியிருக்கு.
தெலுங்கு, மலையாளம்னு பிசியாயிட்டடீங்களே?
கன்னடத்தை விட்டுட்டீங்களே. அங்கேயும் படம் பண்ணியாச்சு. எந்த மொழி படத்துல நடிச்சாலும் நானே டப்பிங் பேசுறேன். அந்த மாநிலத்துக்கு போகும்போது அந்த மாநில மொழியை பேசுகிறேன். அதனால் ஒவ்வொருத்தரும் என்னை அவர்களில் ஒருவராக பார்க்கிறார்கள்.
நீங்க நடிக்கிறதா இருந்த விடியல், வேளச்சேரி படங்கள் என்னாச்சு?
அதை நீங்க அந்த படங்களோட தயாரிப்பாளருங்ககிட்டதான் கேக்கணும். ஒரு நடிகனா நான் நடிச்சுக் கொடுக்கிறதுக்கு எப்பவும் தயாரா இருக்கேன்.
தேர்தல் முடிந்த கையோடு வெளிநாடு போயிட்டீங்களே?
ஒவ்வொரு சம்மர்லேயும் பேமிலியோடு வெளிநாட்டுக்கு டூர் போறது வழக்கம். இந்த முறை தேர்தல் வந்திட்டதால பிரச்சாரத்தை முடிச்சிட்டு ஸ்காட்லாந்து கிளம்பிட்டேன். அங்கதான் மூத்த மகள் ரேயான் ஸ்போர்ட்ஸ் மானேஜ்மெண்ட் படிக்கிறாள். அவள் படிக்கும் யுனிவர்சிட்டியை பார்க்கணும்னு ஆசை, பார்த்துட்டு வந்துட்டேன். அந்த நாட்டோட இயற்கை வழத்தையும் மக்களோட செழிப்பான வாழ்க்கையையும் பார்க்குறப்போ நம்ம நாடு எப்போ இப்படி ஆகும்ங்ற ஏக்கம் வந்தது.
தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?
நாங்கள் எங்கள் அரசியல் கடமையை செய்திருக்கோம். மக்கள் அவர்களின் ஜனநாயக கடமையை செய்திருக்கிறார்கள். இரண்டையும் அறிந்த மீடியாக்கள் கருத்து கணிப்பை வெளியிட்டிருக்கிறது. வெற்றி நிச்சயம் அம்மாவுக்குதான். பாராளுமன்றத்திற்குள் பவர்புல் சக்தியாக அதிமுக நுழையும்.