இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தெலுங்கில் சித்தார்த்-சமந்தா இருவரும் ஜோடி சேர்ந்து நடித்த படம் ஜபர்தஸ்த். இந்த ஒரே படத்தில் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. அதையடுத்து அதுபற்றிய செய்திகளும் ஆந்திராவில் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்தன. இதற்கிடையே சித்தார்த்-சமந்தா இருவரும் காளஹஸ்தி கோயிலில் பரிகார பூஜைகள் நடத்தியதால், அவர்களுக்கிடையே ரகசியமாக திருமணம் நடந்து விட்டதாகவும் பின்னர் செய்தி பரவியது.
ஆனால், அதற்கு இரண்டு பேரும் சரியான பதில் சொல்லாமல் மெளனம் சாதித்து வருவதோடு, பின்னர் இணைந்து நடிப்பதையும் தவிர்த்து வந்தனர். ஆனால், இப்போது தமிழில், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்கும் புதிய படத்தில் சித்தார்த், சமந்தா இருவரும் மீண்டும் ஜோடி சேரப்போவதாக கோலிவுட்டில் நேற்று முன்தினம் செய்திகள் புகைந்தன.
இந்த செய்தி மீடியாக்களில் வெளியானதை அடுத்து, நேற்று டைரக்டர் பாலாஜி தரணீதரன் அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளார். எனது அடுத்த பட வேலைகளில்தான் தற்போது ஈடுபட்டிருக்கிறேன். ஆனால், அந்த படத்தில் சித்தார்த்-சமந்தாவை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்யவில்லை. இருப்பினும் இந்த செய்தி எப்படி பரவியது என்று எனக்கே தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
சரி உங்களது அடுத்த படத்தில் நடிப்பவர்கள் யார்? என்று கேட்டால், சில நடிகர்-நடிகைகளிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் முடிவாகவில்லை.முடிவானதும் முறையான அறிவிப்பை வெளியிடுவேன் என்கிறார் பாலாஜி தரணீதரன்.