பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்தி திரையுலகில் தற்போது பேசப்படும் நடிகையாக வளர்ந்து நிற்பவர் வித்யாபாலன். சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையில் உருவான த தர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடிப்பதற்கு முன்பு கவர்ச்சி நடிகை என்ற அடையாளத்துடன் இருந்த அவருக்கு, அப்படம் தேசிய விருது பெற்றுத்தந்தபோது அங்கீகரிக்கப்பட்ட நடிகையாகி விட்டார். அதையடுத்து வித்யாபாலனுக்கு மும்பை சினிமாவில் பெரிய மரியாதை ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து அவர் கர்ப்பிணியாக நடித்த கஹானி படமும் அவருக்கு இன்னொரு மைல் கல்லாக அமைந்தது. அதனால் இப்போது வித்தியாசமான நடிகையாக இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக அளவில் ரசிகர்களை பெற்றுள்ள நடிகையாகி விட்டார் வித்யாபாலன்.
மேலும், 2012ல் யுடிவி சித்தார்த்ராய் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்ட வித்யாபாலன் தொடர்ந்து கலைச்சேவையும் ஆற்றி வருகிறார். இந்த நிலையில், அவரது கணவர் சித்தார்த்துக்கும், ஒரு புதுமுக இந்தி நடிகைக்குமிடையே தொடர்பு ஏற்பட்டிருப்பதாகவும், வித்யாபாலன் போர்க்கொடி பிடித்ததின் விளைவாக அவர்கள் விரைவில் விவாகரத்து கோரி நீதிமன்றத்துக்கு செல்லப்போவதாக செய்தி பரவியுள்ளது.
ஆனால் இந்த செய்தியை அதிரடியாக மறுத்துள்ளார் வித்யாபாலன். இது திட்டமிட்ட வதந்தி. என் கணவருக்கு அப்படி எந்த நடிகையுடனும் தொடர்பு கிடையாது. நானும், அவரும் கணவன்-மனைவியாக நல்ல சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்திருப்பவர், இந்த தவறான செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று பாலிவுட் நண்பர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.