டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
என்றென்றும் புன்னகை படத்தைத் தொடர்ந்து ஜீவா நடித்து வரும் படம் யான். எல்ரெட் குமார் தயாரிப்பில் கேமராமேன் ரவி.கே.சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவிர்க்க முடியாத காரணத்தினால் அப்படத்தின் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் கலந்து கொள்ளவில்லை.
மற்றபடி, வந்திருந்த அனைவரும் யான் படத்தைப் பற்றி, இப்படம் உலகளாவிய ஒரு சமூக பிரச்சினையை மையமாகக்கொண்டு வருகிறது. ஜாலியாக சுற்றித்திரியும் ஒரு இளைஞன் அந்த பிரச்சினையை எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை என்று தெரிவித்தனர்.
இதையடுத்து பத்திரிகையாளர்களின் கேள்வி நேரம் வந்தபோது, பெரும்பாலான படங்களில் ஜீவா, உடன் நடிக்கும் நண்பர்களுடன் டாஸ்மாக்கில சரக்கடிப்பது போன்று நடிப்பதுபற்றி கேள்வி எழுந்தது. அதற்கு, அது நான் முடிவு செய்யும் விசயமல்ல, டைரக்டர்கள் சொல்வதை அந்தந்த கேரக்டர்களுக்காக செய்கிறேன் என்று அவர் சொன்னார்.
அதற்கு, தங்களது அபிமான நடிகர்களை பின்பற்றும் இளைஞர் சமுதாயம் உங்களது இதுபோன்ற செயல்களால் அவர்களும் புகை, குடி என்று கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறதல்லவா? அதனால் இதை நடிகர்களே தவிர்க்கலாமே? என்று மீண்டும் பத்திரிகையாளர்கள் சார்பில் கேள்விகள் எழுந்தது.
அப்போது அதே மேடையில் இருந்த கவிஞர் தாமரை பேசும்போது, இது ரொம்ப நல்ல கேள்வி. இப்போதைய படங்களில் பெரும்பாலான காட்சிகளை டாஸ்மாக்கை மையமாக வைத்துதான் எடுக்கிறார்கள். மரு அருந்திக் கொண்டேதான் வசனம் பேசுகிறார்கள். மது அருந்திக் கொண்டுதான் பாட்டு பாடுகிறார்கள். இது படம் பார்க்கிற இளைஞர்களின் மனதை பாதிக்கும்.
அதனால், இந்த விசயத்தில் இப்போதைய நடிகர்கள் எம்ஜிஆரை பின்பற்ற வேண்டும். அவர் ஒரு படத்தில் கூட புகை பிடிக்க மாட்டார், மது அருந்த மாட்டார். அதனால் அவரைப்போலவே இன்றைய நடிகர்களுககும் சமுதாயத்தின் மீது அக்கறையும், பொறுப்பும் இருக்க வேண்டும். அதேபோல் டைரக்டர்களும் சமுதாய நலன் கருதி கதை மற்றும் காட்சிகளை அமைக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.