பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
ராஞ்சனா ஹிட்டுக்கு பிறகு தனுஷ் பாலிவுட்டில் நெக்ஸ்ட் டோர் ஹீரோவாகி இருக்கிறார். தற்போது அவர் ஆர்.பால்கி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ஹீரோயின் அக்ஷரா ஹாசன். தனுஷ் காது கேளாத வாய்பேச முடியாத இளைஞனாக நடிக்கிறார். அவருக்கு நம்பிக்கையூட்டி பெரிய ஆளாக்கும் பெரிய மனுஷன் கேரக்டரில் அமிதாப்பச்சன் நடிக்கிறார்.
தமிழ் படங்களில் ஏகப்பட்ட இயக்குனர்கள் இணைந்து நடிப்பது போல் இந்தியில் ஒரு டிரண்டை உருவாக்குகிறார் பால்கி. இந்தப் படத்தில் இந்தியில் முக்கிய இயக்குனர்களான ராஜ்குமார் ஹிரானி, ராகேஷ் ஓம்பிரகாஷ், காஷ் மெஹ்ரா, கரண் ஜோஹர், அனுராக் பாஷூ, கவுரி ஷிண்டே ஆகிய 6 இயக்குனர்கள் நடிக்கிறார்கள். அதாவது அவர்கள் அவர்களாகவே வருகிறார்கள். கதைப்படி தனுஷ், படிப்படியாக வளர்ந்து சினிமா நடிகராவார். அவரை இயக்கும் இயக்குனர்களாக இவர்கள் நடிக்கிறார்கள். இந்தியில் 6 இயக்குனர்கள் ஒரே படத்தில் நடிப்பது இதுவே முதல்முறை.