அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கமல், ஆண்ட்ரியா, பூஜாகுமார், பாமா நடிக்கும் உத்தம வில்லன் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்து வருகிறது. இங்கு கதைப்படி நடக்கும் 8ம் நூற்றாண்டு காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் கூறியதாவது: சென்னை மற்றும் பெங்களூரில் 21ம் நூற்றாண்டு காட்சிகளை எடுத்து முடித்து விட்டேன். 8ம் நூற்றாண்டு காட்சிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றிப் பார்த்தும் பழமையான கிராமம் கிடைக்கவில்லை. எல்லா கிராமமும் கான்கிரீட் வீடுகளையும், டி.வி டிஷ்களையும், மின்சார கேபிள்களையும் கொண்டிருக்கிறது. அதனால் மத்திய பிரதேசத்தில் இன்னும் மாறாமல் இருக்கும் பழமையான கிராமங்களுக்கு சென்று சில மாறுதல்கள் செய்து தமிழ் கிராமமாக்கி படமாக்கி வருகிறோம்.
கமலுக்கும் எனக்கும் பல ஆண்டு நட்பு, நல்ல புரிதல் இருப்பதால் அவரது மனவோட்டத்தை புரிந்து கொண்டு பணியாற்றுகிறேன். அவரும் தக்க ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார் என்றார்.