'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பெப்சிக்கு உட்பட்டது தென்னிந்திய திரைப்படம் மற்றும், தொலைக்காட்சி தயாரிப்பு உதவி நிர்வாக ஊழியர்கள் சங்கம் (புரொடக்ஷன் அசிஸ்டென்ஸ் யூனியன்). இந்த சங்கத்தின் உறுப்பினர்களுக்காக ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள காட்டுபாக்கம் மற்றும் புதுப்பேடு கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. சங்க உறுப்பினர்கள் 822 பேருக்கு பிரித்து கொடுத்தது போக மீதமுள்ள நிலத்தை அப்போது சங்கத்தின் தலைவர்களாக இருந்த ஆர்.சுப்புராஜ், செயலாளர் ஆர்.ராஜமாணிக்கம், பொருளாளர் ஆர்.மாதவன் ஆகியோர் 38 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய்க்கு தனியாருக்கு விற்றதாக கணக்கு காட்டி உள்ளனர். இந்த நிலத்தின் மதிப்பு ஒரு கோடிக்கு மேலாகும்.
எனவே தவறான கணக்கு காட்டி மோசடி செய்துவிட்டதாக மேற்கண்ட தகவல்களுடன் தற்போதைய தலைவர் என்.ஆர்.சந்திரன் மற்றும் நிர்வாகிகள் காஞ்சிபுரம் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர். அதனை விசாரித்த போலீசார் புகாரில் உண்மை இருப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் நிர்வாகிகள் மூன்று பேரையும் கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.