‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் காவ்யா மாதவனும் ஒருவர். இவர் தமிழில், விக்ரம் நடித்த காசியில் தங்கை வேடத்திலும், என் மனவானில் படத்தில் வாய் பேசாத பெண்ணாகவும் நடித்திருக்கிறார். ஆனால் மலையாளத்தில் பிசியாக இருந்தால் அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. பின்னர் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் காவ்யா
ஆனால் அவரது திருமண வாழ்க்கை நீண்டகாலம் நீடிக்கவில்லை. குறுகிய காலத்திலேயே கணவருடன் எழுந்த பிரச்சினை காரணமாக, கருத்து வேறுபாடு என்று சொல்லி அவரை விட்டு பிரிந்த காவ்யா மாதவன், அதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். இந்த நிலையில், தன்னுடன் மலையாளத்தில் 25 படங்களில் நாயகனாக நடித்த திலீப்புடன் மீண்டும் ஜோடி சேர்ந்திருப்பதோடு, அவரிடம் முன்பை விட அதிக நெருக்கம் காட்டி காவ்யா பழகி வருவதாக கடந்த சில மாதங்களாக மலையாள சினிமா கிசுகிசுத்து வருகிறது.
இதையடுத்து, கடந்த ஒரு வருடமாக தனது மனைவி மஞ்சுவாரியாரை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் திலீப், தற்போது விவாகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அதனால் விவாகரத்து கிடைத்ததும், அவர் காவ்யாமாதவனை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி கேரளாவில் வெளியானபோதும், அதற்கு அவர்கள் இருவருமே இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்கிறார்கள்.