மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 23 வயது மாடல் அழகி ஒருவர் தன்னை நடிகர் இந்தர் குமார் சினிமா வாய்ப்பு வாங்கித்தருவதாக கூறி தன் வீட்டில் அடைத்து வைத்து தன்னை கற்பழித்து கொடுமைப் படுத்தினார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இந்தர் குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த குற்றச்சாட்டை இந்தர் குமார் மறுத்தார். "அவர் விரும்பியே என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டார் கற்பழிக்கவில்லை" என்று இந்தர் குமார் கூறினார்.
இதற்கிடையில் மாடல் அழகியின் மருத்துவ அறிக்கை நேற்று (மே 10) வெளியானது.
இதுகுறித்து வெர்சோவா இன்ஸ்பெக்டர் பர்மலே கூறியிருப்பதாவது "மாடல் அழகியை இந்தர் குமார் மிருகத்தனமாக கற்பழித்திருப்பது மருத்து அறிக்கையின் மூலம் தெளிவாக தெரிய வருகிறது. மாடல் அழகியை துன்புறுத்தி தன் வீட்டில் அடைத்து வைத்து இதனை செய்திருக்கிறார். மாடல் அழகியின் தோள்பட்டை, கழுத்து பகுதியில் சிகரெட்டால்சுட்ட காயங்கள் இருக்கிறது. கைகளை கடித்தும் இருக்கிறார். பீர்பாட்டிலால் அடித்த காயமும் இருக்கிறது. இந்த வழக்கில் மருத்துவ அறிக்கை உறுதியான ஆதாரமா இருக்கும்" என்றார்.