‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான அங்குசம் என்ற படத்தை இயக்கியவர் மனுகண்ணன். இவர் அமிஞ்சிக்கரை தியேட்டரில் படம் பார்த்துவிட்டு திரும்பும்போது மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனுகண்ணன் நேற்று (மே 10) போலீஷ் கமிஷனர் அலுவலகத்தில் நேரில் வந்து ஒரு மனு கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நான் தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அங்குசம் என்ற படத்தை எடுத்திருக்கிறேன். அந்தப் படம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து மிரட்டல் இருந்தது. யு சான்றிதழ் பெற்றும் வரிவிலக்கு தர மறுத்தனர். இப்போது படம் வெளியாகி உள்ள நிலையில் என்னை கடுமையாக தாக்கினர். தொடர்ந்து தாக்கும் அபாயம் உள்ளதால் எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
படத்தில் தமிழக முதல்வரையோ, அமைச்சர்களையோ தவறாக சித்தரித்து ஒரு காட்சிகூட கிடையாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருக்கிறார். இதுகுறித்த அமிஞ்சிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.