இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விளங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலை பாடி ஒரே பாட்டில் உலகம் முழுக்க பிரபலமானவர் கானா உலகநாதன். அதையடுத்து அவரது குரலை சினிமாவில் கேட்க முடியவில்லை. ஆனால், அவரது வரவுக்குப்பிறகு பட்டி தொட்டிகளில் பாடிக்கொண்டிருந்த கிராமிய பாடகர், பாடகிகள் அனைவரும் கோடம்பாக்கத்தை நோக்கி படையெடுத்தனர்.
அதன்காரணமாக, நாக்குமுக்க பாடிய சின்னப்பொண்ணு, வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு என்ற பாடிய வேல்முருகன், அட்டகத்தியில் ஆடி போனா ஆவணி பாடலை பாடிய கானா பாலா உள்ளிட்ட பலர் தற்போது தொடர்ந்து சினிமாவில் பாடிக்கொண்டிருக்கின்றனர். இவர்களில் கானா பாலா, அட்டகத்தியில் இரண்டு பாடல்களை பாடி பிரபலமானவர், அதையடுத்து, காசு பணம் துட்டு மணி மணி என்ற பாடலில் நடனமும் ஆடியிருந்தார்.
அதையடுத்து இப்போது பல படங்களில் தானே பாட்டெழுதி, பாடி, நடனமாடவும் தொடங்கியிருக்கிறார். ஆனால், முன்பெல்லாம் ஒரு பாடல் பாடுவதற்கு நாற்பது ஆயிரம் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார். இப்போதோ, ஒரு லட்சம் கொடுங்கள். நானே பாடுவதோடு, நடனமாடியும் விடுகிறேன் என்கிறாராம். கானா பாலாவின் இந்த திடீர் கெடுபிடியினால் சில இயக்குனர்கள் அவரை தவிர்த்து வருகின்றனர். மாறாக, வேல்முருகன் உள்ளிட்ட சில கிராமிய பாடகர்களை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர்.