இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க சிறப்பு பொதுக் கூட்டத்திற்கு ஒரு தரப்பினர் ஏற்பாடு செய்தனர். இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடைபெற்றது. இது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. இதில் கேயார் அணி வெற்றி பெற்றது. இத்தேர்தலில் தோல்வி அடைந்த கலைப்புலி எஸ்.தாணு தேர்தலில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடர்ந்தார். பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் அதில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார். இதில் தேர்தல் முறைகேடு உள்ளிட்ட சில வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, முன்னாள் நீதிபதி முன்னிலையில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும், அதில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவுப்படி இன்று எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பொதுக்குழு கூடியது. கேயார் அணியில் இருந்த செயலாளர் டி.சிவா, துணை தலைவர் டி.ஜி.தியாகராஜன், பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தாணு அணிக்கு தாவி விட்டனர். இதனால் கேயார் அணியை விட தாணு அணியும் பலமானதாக மாறியது. தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக பொதுக்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம் ஒரு கட்டத்தில் மோதலாகவும் வெடித்தது. இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். இந்த மோதல்களுக்கு நடுவே நீதிமன்ற உத்தரவுப்படி தலைவர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அதன் மீது ஓட்டெடுப்பு நடைபெறுகிறது.