இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
அர்ஜூனின் ஹீரோ மார்க்கெட்டை சில படங்களின் தோல்வி சரித்து விட்டதால், மீண்டும் தனது மார்க்கெட்டை உயர்த்தும முயற்சியாக ஏற்கனவே தான் இயக்கிய ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது தயாரித்து இயக்கி நடித்துக்கொண்டிருக்கிறார். தனது மார்க்கெட்டும் வீழ்ச்சியடையும்போதெல்லாம் இதுபோன்று அவ்வப்போது தன்னைத்தானே இயக்கி வெற்றி பெற்று வரும் அர்ஜூன், இந்த முறையும் எனது வெற்றி உறுதி என்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், எனது இயக்கத்தில் உருவாகும் ஒவ்வொரு படத்திலுமே ஒரு சமூகப்பார்வை இருக்கும் குறிப்பாக நாட்டுப்பற்று எனக்கு அதிகம் என்பதால் அதை எனது படங்களிலும பிரதிபலிப்பேன். அந்த வகையில் இந்த படத்தில் கல்வியை முக்கிய கருவாக கொண்டு எடுத்திருக்கிறேன். ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் நான் நடித்த ஜென்டில்மேன் படமும் கல்வி சம்பந்தப்பட்ட கதைதான். என்றாலும் இது இந்த காலகட்டத்தில் கல்வி எப்படி வியாபாரமாகியிருக்கிறது என்பதை சொல்லும வகையில் கதை பண்ணியிருக்கிறேன் என்கிறார்.
மேலும், இப்படத்துக்கு எனக்கு இரண்டு வலுவான நடிகைகள் தேவைப்பட்டனர். ஆக்சன், நடனம், நடிப்பு என அவர்கள் 100 சதவிகிதம் திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்று ஏராளமான நடிகைகள் பரிசீலனை செய்தபோதுதான், சுர்வீன் சாவ்லா, சிம்ரன் கபூர் என்ற இரண்டு திறமையான நடிககைள் எனக்கு கிடைத்தனர்.
இந்த மும்பை நடிகைகள், நான் எள் என்று சொன்னால் எண்ணெய்யாய் நிற்கிறார்கள். அந்த அளவுக்கு எல்லாவிதமான காட்சிகளிலும் அற்புதமாக நடிக்கிறார்கள். இதுபோன்ற ஆக்சன் கதைகளுக்கு மும்பை நடிகைகள்தான் பொருத்தமாக இருப்பதோடு, வேலை வாங்கவும் எளிதாக இருக்கிறது என்கிறார்.