ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னை 28 படத்தில் அறிமுகமான ஜெய், அதையடுத்து எத்தனையோ நடிகைகளுடன் நடித்து விட்டார். குறிப்பாக, எங்கேயும் எப்போதும் படத்தில் அவருக்கும் அஞ்சலிக்குமிடையில் நல்லதொரு கெமிஸ்ட்ரி உருவாகியிருந்தது. அதையடுத்து அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டதாகவும் செய்திகள் புகைந்தன. அதனால்தான், அதையடுத்து அஞ்சலி திடீரென்று ஒருநாள் காணாமல் போனபோது, நட்டநடு ராத்திரியில் போலீசார் ஜெய்யை தொடர்பு கொண்ட விசாரணை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், அஞ்சலி எங்கு சென்றார் என்று எனக்கு தெரியாது. மேலும், நானும், அவரும் காதலிப்பதாக செய்தி வெளியாகிறதே தவிர நாங்கள் காதலிக்கவிலலை என்றும் மறுத்தார்.
அதையடுத்து, திருமணம் என்னும் நிக்கா படத்தில் நஸ்ரியாவுடன் நடித்தபோதும், காதல் கிசுகிசுவில் சிக்கினார் ஜெய். அதற்கு ஜெய் மறுப்பேதும் சொல்லாதபோதும், தமிழ் எனக்கு தெரியாததால் அதுபற்றி அறிந்து கொள்ளத்தான் அவருடன் நெருங்கி பழகினேன். மற்றபடி காதல் எதுவும் இல்லை என்று மறுத்தார் நஸ்ரியா.
அவர்களைத் தொடர்ந்து இப்போது எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கும் படத்தில் இப்போது ஆண்ட்ரியாவுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார் ஜெய். ஏற்கனவே ஆண்ட்ரியா நடித்த பல படங்களைப்பார்த்து அவரது நடிப்பைக்கண்டு வியப்பில் இருந்த ஜெய், அவர் தன்னை முதல் நாள் சந்தித்ததுமே அவரது நடிப்பை ஆகா ஓகோவென்று புகழ்ந்து தள்ளி விட்டாராம். அதில் உருகிப்போன ஆண்ட்ரியா, ஜெய் ஹீரோ என்றதும் பெரிய ஈடுபாடு இல்லாமல் அந்த படத்தில் கமிட்டானவர் இப்போது ஜெய்யுடன் தாராள நெருக்கம காட்டி நடிக்கிறாராம்.
அதில் உருகிப்போன ஜெய், இதுவரை நான் ஜோடி சேர்ந்த நடிகைகளுள் ஆண்ட்ரியாதான் சிறந்த நடிகை . அதோடு எனக்கு பொருத்தமான, அம்சமான நடிகையும்கூட என்று அவரை பெருமைப்படுத்திக்கொண்டு திரிகிறார்.