மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தான் நடிக்கும் படங்களில் கதாநாயகிகள் மட்டுமின்றி கடைக்கோடி நடிகைகள் வரை யாராக இருந்தாலும் அவர்களிடம் ஏதாவது பேச்சு கொடுத்து கலாய்ப்பதில் மன்னர் ஆர்யா. ஆனால், சில மேடைகளில் விஷால் உள்ளிட்டோர் அவரை கலாய்த்ததையடுத்து சில மாதங்களாக அடக்கி வாசிக்கிறார்.
இருப்பினும் தன்னுடன நடிக்கும் எந்தவொரு நடிகைகளாக இருந்தாலும் சென்னை அண்ணா நகரில் உள்ள தனது பிரியாணி கடைக்கு அழைத்து சென்று விருந்து கொடுப்பதை ஒரு பாலிசியாகவே வைத்திருக்கும் ஆர்யா, இதுவரை தன்னுடன் நடித்துள்ள நயன்தாரா, அனுஷ்கா, டாப்சி, ஹன்சிகா, அஞ்சலி, அமலாபால் என பல நடிகைகளை அங்கு அழைத்து சென்று தனது கையாலேயே பிரியாணி பரிமாறி அசத்தியிருக்கிறார்.
அந்த பட்டியலில் இப்போது புறம்போக்கு படத்தில் ஆர்யாவுடன் நடித்து வரும் மாஜி நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவும் இடம்பிடித்துள்ளார். ஆர்யா இந்த மாதிரி விருந்து உபசரிப்பு நடத்தாமல் விட மாட்டார் என்றபோதிலும், பல நாட்களாக அதற்கு டிமிக்கி கொடுத்திருக்கிறார் கார்த்திகா. ஆனால், விடுவாரா ஆர்யா, ஒரு நாள் மதியம் படப்பிடிப்பு பேக்அப் ஆனதால், இதுதான் சமயம் என்று தனது காரில் அவரை வலுக்கட்டாயமாக உட்கார வைத்து தனது பிரியாணி கடைக்கு சென்று மணக்க மணக்க விருந்து கொடுத்திருக்கிறார்.
அதோடு நில்லாமல், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த கார்த்திகாவின் தாய்குலம் ராதாவிற்கும் பிரியாணி பார்சல் கொடுத்து அனுப்பி கார்த்திகா மட்டுமின்றி அவரது அம்மாவின் மனசிலும் இடம்பிடித்து விட்டாராம் ஆர்யா.